உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம்: ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டத்தில் கைது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுததுள்ளார்.

சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்புடையவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியது தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.