மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு : முதல்வர் வேதனை..

மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மனவருத்தமளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது.

நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.

கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் மற்றும் களப் பணியார்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லையென முதல்வர் தெரிவித்துள்ளார்.