இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து..

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் போராடத் தொடங்கினர் . இதனால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏப்ரல் 5ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது அமைச்சரவையை அவர் கலைத்தார். அத்தியவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இலங்கை மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தி வருகின்றனர்.