இலங்கை சிறையில் கைதிகள் மீது கொடூர தாக்குதல்..

இலங்கை சிறை ஒன்றில் கைதிகளை போலீசார் இரக்கமின்றி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள காட்சிகளில், கைதிகளை முட்டி போட்டு நடக்க வைப்பதும்,

அப்படி நடந்து செல்வோரை தடி கொண்டு தாக்குவதும் பதிவாகி உள்ளது.

மேலும் கைதிகளை ஈவு,இரக்கமின்றி அடித்து நொறுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி இந்த சம்பவம் அம்பான் தோட்டை சிறையில் நடைபெற்றதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.