இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்..

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் மாநிலங்களவையில் எழுத்து மூலம் புதுவை அதிமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.