மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம் : முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ..

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்தார்.

மராட்டிய மாநில முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.