மகாவீர் நிர்வான் முன்னிட்டு நவ.4ல் அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. அனைத்து மண்டல அலுவலர்களும் இறைச்சி கடைகள், கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.