பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி : பிரதமர் நரேந்திர மோடி டிவிட்..

பசும்பொன் தேவர் ஜெயந்தி தினத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
மக்கள் நலனுக்காகவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
விவசாயிகள் மற்றும் தொழிலார்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.