மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அனுமதிக்க தமிழக அரசு எதிர்ப்பு


மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அனுமதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இறக்குமதி மணலை வேண்டுமானால் கேரளத்துக்கு கொண்டுசெல்ல அனுமதிப்பதாக தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி விளக்கமளித்துள்ளார்.