மாசிமகத் திருவிழா : அரளிப்பாறையில் கோலாகல மஞ்சு விரட்டு..


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான மாடுகளும்,மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். மஞ்சு விரட்டு வாடிவாசல் அதாவது தொழுவம் சிறிய மலைக்குன்றுக் கீழே அமைந்துள்ளது. பார்வையாளர்கள் மலைக்குன்றில் அமர்ந்து பாதுகாப்பாக மஞ்சுவிரட்டை கண்டுகளித்தனர். மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்தில் மாடுகளை பிடித்தனர்.