மோடி மீண்டும் பிரதமர் ஆகாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து : ஹேமமாலினி..

நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆகாவிட்டால் நாட்டுக்கே ஆபத்தாகி விடும் என்று நடிகையும் எம்பியுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் மதுரா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக ஹேமமாலினி மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மோடி மீண்டும் பிரதமராக வருவதை தவிர வேறு வாய்ப்பே இல்லை என்றார்.

அவரைத் தவிர்த்து, வேறு யாரேனும் வெற்றி பெற்றால் நாட்டுக்கே ஆபத்தாகி விடும் என்று அவர் குறிப்பிட்டார்.

மோடியை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்காகவே தாங்கள் அனைவரும் கடுமையாக பணியாற்றி வருவதாக கூறினார்.

நாட்டில் ஊழலே இல்லை என்பதை மோடி உறுதிப்படுத்தி இருப்பதாகவும் ஹேமமாலினி தெரிவித்தார்.