அதி நவீன “விஜயா” ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்பணிப்பு..

ரூ.185 கோடியில் தயாரிக்கப்பட்ட  அதிநவீன் வசதிகளைக்கொண்ட “விஜயா” ரோந்து கப்பல் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் 11 அதிகாரிகள் உட்பட 102 பேர் பயணம் செய்யலாம். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 5000 நாட்டிகல் மைல் பயணம் செய்யலாம்.

பாதுகாப்பு துறை செயலாளர் சஞ்சய் மித்ரா விஜயா கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் விஜயா கப்பல் இந்திய கடலோர காவல் படையின் ரோந்துப்பணி, பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படும்.