எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் துரைமுருகன் : சட்டப்பேரவையில் முதல்வர் புகழாரம்..

சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் வாழ்த்தி புகழ்ந்து பேசியபோது துரைமுருகன் கண்கலங்கினார்.
கலைஞர்,அன்பழகனுக்குப் பிறகு எனக்கு வழிகாட்டியாக இருப்பவர்தான் துரைமுருகன் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்துபவர் எனவும் கூறினார். கட்சிக்கும் ஆட்சிக்கும் துரைமுருகன் உறுதுணையாக இருக்கிறார் என தெரிவித்தார்.
50 ஆண்டுகாலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பொன்விழா நாயகனாக இருக்கிறார் துரைமுருகன் என்று முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத்து தொடர்ந்து அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர். ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் – சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரை முருகனுக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ். பாராட்டு தெரிவித்தார்
தலைவரை விசுவாசிக்கின்ற தலைவர்கள் அரசியலில் அமைவது கடினம்; அப்படிப்பட்டவர் முதலமைச்சருக்கு கிடைத்து இருக்கிறார் – சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டினார்.

50 ஆண்டுகளாக வற்றாத ஆளுமை துரைமுருகன். தமிழகத்திற்கு தன்னம்பிக்கை தரும் இயக்கமாகவும் திமுக இருக்கிறது. இந்த இயக்கத்தின் வெற்றி வீழ்ச்சிகளிலும் பயணித்தவர் – சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் பாராட்டினார்.
முதல்வர் பேசும் போது அமைச்சர் துரைமுருகன் கண்கலங்கினார்.