புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? :உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி…

புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியான கேள்வியெழுப்பியுள்ளது.
4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் உத்தரவிட்டுள்ளார்.
புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்