வடகிழக்கு பருவமழைக்கான சூழ்நிலை உருவாகவில்லை…

வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழ்நிலை இதுவரை உருவாகவில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் தக்கலை, நாகர்கோயிலில் 2 செ.மீ., மழை உருவாகியுள்ளது எனவும் கூறியுள்ளது.