ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய தடை


ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்சிடாக்சின் மருந்து வழங்கப்படும் என்றும் ஆக்சிடாக்சின் மருந்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த புகாரை அடுத்து மருந்து கடைகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிடாக்சின் பெண்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.