உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்


உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து 15 நாளில் மாநில தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று தர உத்தரவிடப்பட்டுள்ளது. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலருக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.