பரிதி இளம்வழுதி உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னையில் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது தன்னந்தனியாக சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை படைத்தவர் பரிதி இளம்வழுதி என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

பரிதி இளம்வழுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 1989 முதல் 2011 வரை 28 ஆண்டுகள் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார்.

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பரிதி இளம்வழுதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் 1996 – 2001-ல் துணை சபாநாயகராகவும், 2006 – 2011 வரை விளம்பரத்துறை அமைச்சராக பரிதி இளம்வழுதி பதவி வகித்தார்.

பரிதி இளம்வழுதி எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தார். 2013-ல் திமுகவில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். தற்போது அமமுகவில் இருந்தார்.