பெரியார் பிறந்த நாளான செப்.,17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

பெரியார் பிறந்த நாளான செப்lம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பகுத்தறிவு,சுயமரியாதை என சமூக நீதிக்காக வாழ்நாளெல்லாம் போராடிய தந்தை பெரியார். அவரின் போராட்டங்களை யாராலும் காப்பியடிக்க முடியாது.

95 வயது வரை அடிதட்டு மக்கள்,பெண்கள் என அனைவருக்குமாக போராடினார் பெரியார்.

அவரின் பிறந்த நாளான செப்டம்பர் -17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.