பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்., பாரத் பந்த் : திமுக ஆதரவு..


இன்று சென்னையில் பெட்ரோல் விலை இன்று 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ 83.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், இதில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நடத்தும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்புக்கு திமுக தன் முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

பொதுமக்களை அன்றாடம் பாதித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் நடத்தும் முழுயடைப்பு போராட்டம் வெற்றி பெற திமுக ஒத்துழைப்பு நல்கும் என திமுக தலைவர் மு.க.ஸடாலின் தெரிவித்துள்ளார்.