சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…

சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் சேர விருப்பமில்லாத காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது இவ்வாறு கூறியுள்ளார்.

அப்போது, உயர் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவினை பின்பற்ற வேண்டியது காவல் அதிகாரிகளின் கடமை என்றும்,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சேர விருப்பமில்லாத காவல் அதிகாரிகள், சிறப்பு அதிகாரி முன் ஆஜராகி கலந்தலோசிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் மயில் சிலை கடத்தல் வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து

நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.