3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வாபஸ்..

3வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடித்துக் கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.டிசம்பர் 11ஆம் தேதி முதல் தங்களது வீடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

3வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலான விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

அன்மையில் ஒன்றிய அரசு 3வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதாக டெல்லியில் போராடி வந்த விவசாயிகளுக்கு ஒன்றிய வேளாண் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக குழு அமைக்கப்படும் என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.