புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்..:மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி

புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்துள்ளதால் மக்கள் அங்கு செல்ல நேரிடும். மேலும் கோயம்பேடு மூலம் புதுச்சேரியில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.