புதுச்சேரியில் வேல் யாத்திரைக்கு தடை: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

நீதிமன்றத்தை மதிக்காமல் பாஜகவினர் நடந்துகொள்வதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.