தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குங்கள் :கனிமொழி எம்பி

தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் ,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்.பி. தனது டிவிட் பக்கத்தில்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் எங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசுப் பணி வழங்குங்கள் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர்.

அரசுதான் செவிசாய்க்க மறுக்கிறது. இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் இது குறித்து உத்தரவிடுவாரா ?
தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனைகளில், 12 இடங்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அபாயகரமான உலோகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழக அரசு, இப்பகுதிகளை சீர்செய்ய, வல்லுனர்களோடு ஆலோசித்துவிரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலத்தடி நீர் மற்றும் பூமியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி தருவதை தவிர்க்க வேண்டும்.
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலத்தடி நீர் மற்றும் பூமியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி தருவதை தவிர்க்க வேண்டும்