புதுவை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்தை பறித்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கிரண்பேடி விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைகாலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கான சிறப்பு அதிகாரத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.