சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் ..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என போராடியவர்கள் மீது நிலக்கல், பம்பையில் நேற்று தடியடி நடத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பாதுகாப்பு குழு சார்பில் நடத்தப்படும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக கன்னியாகுமரி – திருவனந்தபுரம் செல்லும் அரசு பேருந்துகள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.