சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்., எம்எல்ஏ-க்கள் தீர்மானம்..

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களாக துணை முதல்வர் சச்சின் பைலட் அசோக் கைலாட்டுக்கு எதிராக போர்க் கொடி துாக்கினார் .
பாஜகவில் சேரப் போவதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் முதல்வர் தலைமையில் ஜெய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 102 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.