ஏமனில் சவுதி விமானப்படை தாக்குதல் : 30 பேர் உயிரிழப்பு..


ஏமனில் சவுதி விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். அர் துராஹிமி என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கார்களில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் ஹவுதி போராளிகள் என்று கிடைத்த தவறான தகவலையடுத்து சவுதி அரேபியா விமானப்படையின் விமானம் ஒன்று கார்கள் மீது குண்டு வீசித் தாக்கியது. இதில் 22 குழந்தைகள் 4 பெண்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.