ஏ.டி.எம்.மில் இனி ரூ.20 ஆயிரம் மட்டுமே : நாளை முதல் எஸ்.பி.ஐ., கட்டுப்பாடு..

பாரத் ஸ்டேட் வங்கி (Sbi) வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும் புதிய நடைமுறை, நாளை (அக்.31-ம் தேதி) முதல் அமலாகிறது.

அதன்படி, ஒரு சில வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.