செந்தில் பாலாஜி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்..


மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜரானார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே 4 முறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி ஆஜராகாமல் இருந்தார்.