சிங்கப்பூரில் தொடங்கியது தீபாவளி கொண்டாட்டம்: லிட்டில் இந்தியாவில் கோலாகலம்…

சிங்கப்பூரில் தொடங்கியது தீபாவளி கொண்டாட்டம்: லிட்டில் இந்தியாவில் கோலாகலம்

கடந்த சில மாதங்களாக கரோனா நெருக்கடியால் வர்த்தகம் பெரிதும் சரிந்துவிட்ட நிலையில், அந்த நல்லகாலம் இப்போதே பிறந்துவிடாதா என்பதே லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களுக்குப் பொங்கல் திருநாளைப் போல தீபாவளியும் மிக முக்கியமான காலகட்டம்.
ஒவ்­வோர் ஆண்­டும் தீபா­வ­ளிப் பண்­டி­கைக் காலத்­திற்­காக லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் எதிர்­பார்த்து காத்­தி­ருப்­பர். உள்­ளூர்­வா­சி­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள், சுற்­று­லாப் பய­ணி­கள் என மக்­கள் கூட்­டம் அங்கு நிரம்பி வழிய, தீபா­வளி விற்­பனை சூடு­பி­டிக்­கும்.

ஆனால், கொவிட்-19 நோய்ப் பர­வ­லா­லும் கட்­டுப்­பா­டு­க­ளா­லும் வர்த்­த­கம் வழக்­கம்போல் இருக்­காது என்­பதை கடைக்­கா­ரர்­கள் அறிந்திருக்கின்றனர்.

மக்­க­ளின் பாது­காப்பு கருதி, இம்­முறை கிண்டா சாலை­யில் தீபா­வளி விற்­ப­னைச் சந்தை இராது என்­றா­லும் இர­வில் வண்­ண­ம­ய­மாக ஒளி­ரும் சாலை­கள் பண்­டிகை உணர்­வை ஏற்படுத்தி, உற்­சா­க­ம் அளிப்­ப­தாக அமைந்­துள்­ளன.