சிவகங்கை மாவட்டம் பேர்வலசை கிராமத்தில் கோலாகலமாக அம்மன் கோயில் கும்பாபிஷேகம்..


சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பேர்வலசை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சோனையா சுவாமி மற்றும் ஸ்ரீ கள்ளச்சி அம்மன் திருக் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.

விழாவை பேர்வலசை கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கும்பாபிஷேகத்திற்கு பேர்வலசையில் பிறந்து வெளியூர்களில் திருமணம் செய்து கொடுத்த பெண்களுக்கெல்லாம் சொல்லி குடும்பத்தினருடன் வரவழைத்து வழிபாடு் நடத்தி சிறப்பித்தனர்.