இந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..

வானில் அரிதாக நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியத் தொடங்கியது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் பகல் 1.42 மணிக்கு முடிவடைகிறது. தமிழகத்தில் 40 சதவீதம் வரை மட்டுமே கங்கண சூரியகிரணத்தை பார்க்க முடியும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை,நெல்லையில் சியள அளவில் சூரியனை நிலவு மறைப்பது தெரிந்து வருகிறது.

பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன.

இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும்.

அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படும்.ஜூன் 21ல் நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால், சூரியன் வளையம் போன்று தோன்றுகிறது.

இது ‘வளைய சூரிய கிரகணம்’ என அழைக்கப்படுகிறது. இது காலை 10:22 மணிக்கு துவங்கியது.

மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் தெரியும். ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும்.

மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34 சதவீதம் தெரியும். தமிழகத்தில், சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தெரிய துவங்கியது.
மேற்காசிய நாடான துபாய் நகரில் முழுமையான சூரிய கிரணகம் தெரியத் தொடங்கியது.

அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும். வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி, சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்