விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும்:இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல்..

விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அற­நி­லை­யத்­துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள அனைத்து கோவில்­க­ளின் தல ­வ­ர­லாறு, ஓலைச்­சு­வடி­கள், கல்­வெட்­டு­கள் ஆகி­யவை முறை­யாக ஆவ­ணப்­ப­டுத்­தப்­படும் என அத்­து­றை­யின் அமைச்­சர் சேகர்­பாபு தெரி­வித்­தார்.
இவை அனைத்­தும் மின்­னணு மய­மாக்­கப்­பட்டு, பக்­தர்­கள் எளி­தில் பார்­வை­யி­டக் காட்­சிப்­ப­டுத்­தப்­படும் என்­றும் அச்­சிட்டு புத்­தகங்­க­ளாக வெளி­யிட நட­வடிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது என்­றும் அவர் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“ஆன்­மிகப் பெரி­யோர்­க­ளால் வெளி­யி­டப்­பட்ட அரிய வகை நூல்­கள், கோவில் தொடர்­பான நூல்­கள் உட்பட அனைத்து நூல்­களை­யும் மறு­ப­திப்பு செய்­யும் பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

“துறை­யின் சார்­பில் மாதந்­தோறும் திருக்­கோ­வில் திங்­க­ளிதழ் என்ற பெய­ரில் மாத இதழ் வெளி­யி­டப்­பட்டு, அதில் கோவில்­க­ளின் முக்­கியத் திரு­வி­ழாக்­கள், கோவில் வர­லாறு, கல்­வெட்­டு­கள் பற்­றிய முக்­கிய தக­வல்­கள் வெளி­யி­டப்­படு­கின்றன,” என்று அமைச்­சர் சேகர்­பாபு கூறி­யுள்­ளார். விரை­வில் அனைத்து கோவில்­க­ளின் வர­லாறு­களும் மறு­ப­திப்பு செய்­யப்­பட்டு இணை­யத்­த­ளத்­தில் வெளி­யி­டப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.