விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக அரசின் ஆணவப் போக்கே காரணம்: ஸ்டாலின் சாடல்

நாடு   முழுவதும்   உள்ள இலட்சக்கணக்கான  விவசாயி கள்  டெல்லியில் போராடுவ தற்கு பா.ஜ.க அரசின் ஆணவப்  போக்கே  முழு முதற்காரணம் என்றும், விவசாயிகள் நிர்வாணப்   போராட்டங்களை தயவு செய்து நாகரீகமான முறையில் அறவழிப்    போராட்டங்கள் மூலம் தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்த வேண்டும் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அவர் விடுத்துள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது  :

விவசாயிகளின்  கடன்  தள்ளுபடி, வேளாண்  விளை  பொருட்களுக்கு கட்டுபடியாகக்கூடிய  நியாமான விலை  உள்ளிட்ட  எந்த  கோரிக்கையையும்    முறையாகப்    பரிசீலனை செய்து  பிடிவாதமாக  நிறைவேற்ற மறுத்து, பலமுறை நடைபெற்ற அறவழி அமைதிப்   போராட்டங்களையும் துளியும்  மதிக்காமல்  மத்தியில்  உள்ள பா.ஜ.க.  அரசும்,  பிரதமர்  நரேந்திர மோடியும்  இந்த  நான்கரை  ஆண்டு காலமாக    பாராமுகமாக    நடந்து அலட்சியப்படுத்திக்  கொண்டிருப்பது மிகுந்த  வேதனைக்குரியது. உதாசீனப்படுத்தும் மத்திய – மாநில அரசுகள்!

நாடு  முழுவதும்  உள்ள  லட்சக் கணக்கான    விவசாயிகள்    இன்றைக்கு  தலைநகர்  டெல்லியில்  கூடி போராட்டங்களையும்,      மாபெரும் பேரணியையும்  நடத்தியிருப்ப  தற்கு மத்திய  பா.ஜ.க.  அரசின்  ஆணவப் போக்குதான்    முழுமுதற்  காரணம் என்பதில்     எவ்வித     சந்தேகமும் இல்லை.

விவசாயிகளின்  கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும்    மத்திய  –  மாநில அரசுகளின்   போக்கு   கண்டத்திற் குரியது       என்கிற       போதிலும், விவசாயிகள்    தங்கள்    அறவழிப் போராட்டங்களை  அமைதியாக வும், நாகரீகமாகவும்,  நமது  பண்பாட்டுக்கு எவ்விதக்      குறைவும்      ஏற்பட்டு விடாமலும்    நடத்திட    வேண்டும் என்பதில்  இரு  வேறு  கருத்துகளுக்கு இடமில்லை.

தமிழ்நாட்டின்      பாரம்பரியசீர்மிகு  பண்புகளுக்கு  குந்தகம்ஏற்படும்  வகையிலும்,  தமிழகமக்களே முகம் சுழிக்கும் வகையிலும்   நடைபெறும்நிர்வாணப் போராட்டங்களை திராவிட        முன்னேற்றக்    கழகத்தின்  சார்பில்  நிச்சயம்  ஏற்றுக்  கொள்ளவோ     ஆதரிக்கவோ   இயலாது.இத்தகையபோராட்டமுறைகள்,   போராட்டத்தின்  மைய  நோக்கத்தை  திசைதிருப்புவதாக  அமைந்து  விடும்என்பதைச்    சற்று    எண்ணிப்பார்க்க  வேண்டும்.ஆகவே,     தேசிய     தென்னிந்திய    நதிகள்    இணைப்புவிவசாயிகள்  சங்கத்  தலைவர்அய்யாக்கண்ணு        அவர்கள்இதுபோன்ற  நிர்வாணப்  போராட்டங்களை       தயவு       செய்து மக்கள் முகம் சுழிக்கும்போராட்டங்களை  தி.மு.க.  ஆதரிக்காது!கைவிட்டு,  தமிழகத்தின்  மாண்பையும்,   மதிப்பையும்   மேலும்போற்றிப் பாதுகாக்கும் வகையில்ஜனநாயக  ரீதியிலான,  நாகரீகமான     அறவழி அமைதியானபோராட்டங்களில்ஈடுபட்டு     விவசாயிகளின்  ஒட்டுமொத்த  வேதனைக்       குரலைவெளிப்படுத்தவேண்டும்  என்றுஅன்புடன் கேட்டுக்கொள்கி  றேன்.

இவ்வாறு  தலைவர்  மு.க.ஸ்டாலின்  அவர்கள்தமது      அறிக்கையில் தெரிவித்துள்ளார்.