சிலைகள் காணாமல் போயிருக்க கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் வாய்ப்பில்லை : கமல்..

மீ.டுஸ் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிலைகளை மீட்க நாங்கள் உதவி செய்கிறோம் என்ற போது வேண்டாம் என்றார்கள் என்று கூறிய அவர், கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் சிலைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

மேலும் மழைக்காக இடைத்தேர்தலை தள்ளிப்போட வேண்டுமா? என்றும் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.