ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் :உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆலையைத் திறக்க தடைவிதித்தது செல்லும் எனத் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

அப்போது சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை திறக்க தடைவிதித்த உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. இந்த வழக்கில் மனுதார்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.