பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.