தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதில் சம்ஸ்கிருதப் பாடல்: வைகோ கண்டனம்


சென்னை ஐஐடியில் நடைபெற்ற மத்திய அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் சமஸ்கிருதத்தில் மகா கணபதி பாடல் இசைக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரியும் பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இது தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் என மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.