தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,520-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5,41,819- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,263- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.67 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1295 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167376-ஆக அதிகரித்துள்ளது.