தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..

தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரு நாட்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் காட்டுமன்னார் கோயில் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

வரும் 30-ந்தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள் ளதாகவும்,மே1 மற்றும் 2-ந்தேதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.