வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்..

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை மத்திய அரசின் அனுமதியுடன் அழைத்து வர உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திட வேண்டும்.

தமிழர்களை அழைத்து வருவதற்கும், மருத்துவ ரீதியாகக் கண்காணிப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியள்ளார்.