தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை..

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றும்,

நாளையும் வட கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் உள்தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.