தமிழகத்தில் கரோனா தொற்று : பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்வு…

தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் இன்று மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,659-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த வீடு திரும்பிய நிலையில்

இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,66,956-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.