மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை; தங்கள் பதவியை காப்பாற்றவே யாகம் நடத்தினர்: ஸ்டாலின்

தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை உடனடியாக தமிழக அரசு போக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசி வரும் ஸ்டாலின் கூறியதாவது, ‘குடம் இங்கே, குடிநீர் எங்கே?’ என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை;

தங்கள் பதவியை காப்பாற்றவே யாகம் நடத்தினர் என குற்றம் சாட்டினார். தண்ணீர் எங்கே, தண்ணீர் எங்கே என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் குரலாக உள்ளது என கூறினார்.

நிதி, நீதி,நேர்மை, சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம்; இப்பொது தண்ணீருக்கும் பஞ்சம் என ஸ்டாலின் கூறினார். தண்ணீர் பஞ்சத்தை பற்றி முதல்வர், துணை முதல்வர் கவலைபடவில்லை என குற்றம் சாட்டினார்.