தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி தென்மாவட்டங்கள் வரை பரவியுள்ளதன் காரணமாக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.