மெரினா கடற்கரையை டிசம்பர் முதல் வாரத்திற்குள் திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் :உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையைக் கரோனா பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையை திறக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது..

இந்த வழக்கின் விசாரனையின் போது வரும் டிசம்பர் முதல் வாரத்திற்குள் திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து வருகிற 30ம் தேதிக்குள் அரசு முடிவெடுக்க வேண்டும்” -நீதிபதிகள் தெரிவித்தனர்