தமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என தகவல் தெரிவித்துள்ளது.
டிச.13-ம் தேதி முதல் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.