தமிழகம்,புதுவையில் நவ., 6-ம் தேதி வரை கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகம்,புதுவையில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் நிர்வாக ரீதியிலான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.